ஞாயிறு, 1 ஜூலை, 2012

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

உன் பிறப்பில் தான்

கண்டுகொண்டேன்…

கவிதைக்கும்

உயிருண்டென!


திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றனவாம்......

இவர்களின்


நிச்சயிக்கப்பட்டுவிட்ட

சொர்க்கத்திற்கு,

திருமணநாள் நல்வாழ்த்துகள்...



பிறந்த நாள் வாழ்த்து

உன் பிறந்த நாள் அல்லவா கண்முன்னே சொன்னால் மறந்து போகும்

கவிதையாய் சொன்னால் காற்றில் போகும்


எப்படி சொல்ல என் வாழ்த்தை

சற்று வித்தியாசமாய் இறைவா என் ஆயுளில் பாதியை

என் நண்பனின் ஆயுளுடன் சேர்த்து விடு

என்று வேண்டி வாழ்த்துகிறேன்

நீ பல்லாண்டு வாழ வேண்டும் என்று

பிறந்த நாள் வாழ்த்து

பூக்களின் வித்து நீ...!

புன்னகையின்சொத்து நீ...!

அவதாரம்பத்து நீ...!

ஆண்களுக்கெல்லாம்கெத்து நீ..!

பெண்களுக்கெல்லாம்

முத்து நீ ...!

உலக அன்னையர்களுக்குகொடுத்த தத்து நீ...!

நீ என்னை நட்பில்

பித்தாக்கிவிட்டாய்...!

அதை நான்

பூங்கொத்தாக்கிவிட்டேன்..!

பிறந்த நாள் வாழ்த்து கூற...!
வாழ்த்தலாம் வாங்க
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் பரிசாக


வெறும் சத்தங்களைத்
தரும் அழைப்பேசியின்
முத்தங்கள் வேண்டாம்...
எண்ணம் குழைத்த
என் வார்த்தைகள்
வாங்கிக்கொள்
பிறந்தநாள் பரிசாக....
உன் பிறந்த நாளை பார்த்து
மற்ற நாட்களெல்லாம்
பொறாமை படுகின்றன
உன் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்று...
உன் பிறந்த நாள்
பரிசு என்ன வேண்டும்
என்று கேட்டதற்கு
என்ன பரிசாக இருந்தாலும்
என் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும்
என்றாய் ...

எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை...
பல்லாண்டு வாழ்க ...
நீயும் உன் உணர்வுகளும்...
விந்தையான உலகம்…….!
விழங்கமுடியா மானிடம்……!
நொந்துபோய் வீழாமல்…….
சிந்தனைவேண்டும்.
சீரியதாய் நேரியதாய்

வாழக்கிடைத்த பயன்
நான்மட்டும் வாழ்வதல்ல
நாம்வாழ நான்வாழ
சுற்றமே வாழவேண்டும்
இவ்வுண்மை புரிதல்வேண்டும்

நீவீர் சிரித்து
இன் நிலத்தைச் சிரிக்கவைத்து
நீர் வாழும் வாழ்வை
நினைத்துப் பார்க்கின்றேன்
இதுதான் வாழ்கை

வருடங்கள் வருவதிலும்
போவதிலும் என்னபயன்?
செய்யும் செயல்களால்த்தான்
செயல்கழுக்கும் பயன்

இன்னுமோர் ஆண்டு
இனிதாய் மலர்ந்திருக்கு
புதிதாய் பெரிதாய்
நிறைவாய் உயர்வாய்
வாழ வாழ்த்துகிறேன்…!

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


வாழ்த்துக்கள் சொல்ல
வார்த்தைகள் தேடி
வாசல்வரை வந்துநின்றேன்!
நீங்கள்
காதல் பேசி
கவிகள் பேசி
வார்த்தைகள் யாவற்றையும்
வசமாக்கி விட்டீரோ?

வார்த்தைப்
பஞ்சத்திலே நான்!
நீவீரோ மஞ்சத்திலே!
வாழ்த்துக்கள் உங்களுக்கு!
வாழ்க பல்லாண்டு!

நிலாவின் கைப்பற்றி
நிறைவிழா காணும்
மணமகனிற்கு வாழ்த்துக்கள்!

தமிழன்னை மடியில்
தவழ்ந்த மைந்தனை
தன்மடி தாங்கும்
மணமகளுக்கும் வாழ்த்துக்கள்!

வாழ்க்கை என்பது
வளைவுகள் நிரம்பிய
வசந்தப்பாதை!
இன்பமும் இனிதே நிறைந்தது!
இன்பத்தி
ல் இணைந்தே வாழ்க!

தென்றலின் சாமரவீச்சில்
திங்களின் ஒளி ஒத்தடத்தில்
மங்கள
நாளில்
மணமக்கள்
மகிழ்வுடன் வாழ்க!

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை


ஆன்றோர் வாழ்த்துரைக்க
ஆயிரமாய் பூச்சொரிய
மங்கை திருமகளாய்
மணவறையில் காத்திருக்க

நாதசுர மேளங்கள்
நல்லதொரு வாழ்த்திசைக்க
நங்கை திருக்கழுத்தில்
நம்பி அவன் நாண்பூட்ட

கட்டியவன் கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க

இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!

திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!

அன்புடன் வெற்றிவேல்


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!
குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!

எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை



சாத்திரங்கள் பழையன
சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே

சத்தியமாய்ப் புதியன


பஞ்சாங்கம் பார்ப்பது
பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே

அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை
மணமகன் உன்னிடம்
வரையாத ஓவியம்

இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும்

உன்மனம்மணமகளின் சொத்தென
சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர்
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம்- நட்புகள்


திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

மலர்களில்
மாலை கட்டும் வித்தையை
உன்
கண்களுக்குச் சொல்லி

வைத்த மணமகள் – எங்கள்மணமகனின் எண்ணங்களை
மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று

வாழையடி வாழையாய்
பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில்

புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர்

வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும்

மாந்தர்களும் வாழ்த்துவர்

திருமண வாழ்த்து கவிதை


நாதஸ்வர மேளதாளங்கள் முழங்க
நற்றமிழாலும் அற்றமிழாலும்
நல்லோர்கள் வாழ்த்த.....

பட்டாடை சரசரக்க
புது மெட்டி ஒலிக்க
நறுமலர்களால் கோர்க்கப்பட்ட
மாலையை தோளில் ஏந்தி....

சந்தனக்களபமும் திலகமும் சூடி
விழிகளில் விரவியஅழகிய
விதிர்ப்புடனிருக்கும்
மணமகளுக்கு
மங்கல நாணை
மணமகன் சூட்ட....

பூச்சொரிதலாய்
இனிய உணர்வுகளுடன்
தொடங்கும்
இச்செந்தூரபந்தம்
தொடரட்டும் என்றென்றும்!!!!

by
சக்தி

வாழ்ந்திட வாழ்ந்திடவே.!

விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீங்கள் வாழ்ந்திட வாழ்ந்திடவே.!

திருமண [கல்யாண] வாழ்த்து கவிதை

கையோடு கை சேர்த்து
இதயங்கள் இரண்டும் இணைந்து
மண விழா கண்டு
மனதை மணத்தால் அரவணைத்து
நூறாவது நாள் காணும் நீங்கள்
நூறாண்டு காலம் வாழ்வை நோக்கி
ஊரார் வாழ்த்துகளோடு
உலகமுள்ளவரை வாழ்த்திட வாழ்த்துகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக