திங்கள், 15 ஜூலை, 2013

பிறந்தநாள் வாழ்த்து எனக்கே எனக்கா :)

பிறந்தநாள் வாழ்த்து எனக்கே எனக்கா :)


அழைத்த அழைப்பிதற்கு ஓடோடி வந்த
அன்பு நெஞ்சங்களே வருக வருக ..........
இன்பத்திலும் துன்பத்திலும் கலந்திருக்கும்
இணையற்ற வலைத்தள உறவுகளே வருக வருக....
                                                   
வகை வகையாய் உணவு செய்து
வற்றாத அன்பு கலந்து
நான் பிறந்த நாளிதனில்
நன்றி சொல்லவே காத்திருந்தேன்

தேன்கொளிக்கும் கருத்து மழையைத்
தேடி வந்து பொழிந்தவர்களே
நான் கொடுக்கும் விருந்திதனை
நாள் முழுதும் சுவைத்திடுவீர் :)))






மச்சம் உண்டு சைவம் உண்டு
மனதிற்கேற்ப வகையில் உண்டு
மிச்சமின்றி உண்டுடுவீர்
மிருதுவான மனம் படைத்தவர்களே ...

அச்சம் வேண்டாம் எண்ணெய்யில்லை
அளவு கடந்த கொளுப்பும்மில்லை
இன்றுமட்டும் எனக்காகவே
இயன்றவரைக்கும்  உண்டு களிப்பீர் .....
                                               

தேனும் பாலும் கலந்து நல்ல
தித்திக்கும் பலகாரமும் உண்டு
போகும் போதும் எடுத்துச் சென்றால்
புன்னகை பூக்கும் என் மனதினில் இன்று ....



பார்த்துப் பார்த்து வாங்கி வைத்த
பலவகை இனிப்பு வகைகளும் கொஞ்சம்
ஈற்றில் சிறுவர்கள் வீட்டினில் இருந்தால்
இதையும் எனக்காக எடுத்துச் செல்லுங்கள் :)


பாக்கு வெற்றிலை  போடும் பழக்கம்
இருந்தால் இதையும் எடுத்துக் கொள்ளுங்கள்
பழங்களுண்டு தண்ணியுமுண்டு
பழரசம் வேண்டுமா கேட்டு வாங்குங்கள் .....:))



குளிர்களி வேண்டுமா தேனீர் வேண்டுமா ?..
குடிக்கத் தண்ணி ஏதேனும் வேண்டுமா?...
பாட்டுத் தொடர்ந்து கேட்க்கப் பிடிக்குதா ?..
நாஞ்சில் மனோ அண்ணா பாட்டுப் பாடுங்க :)


வாழ்த்துச் சொல்ல வந்த உறவுகளே
வந்தவரைக்கும் நன்றி சொல்லுவேன்
கூட்டம் கலையும் நேரமிப்போ
கொண்டு வந்த பரிசைப் பார்ப்போம் !!:......


ஆஹா அத்தனையும் பாடலா !!!!....
தித்திக்கும் பாடல் நூறு
தெய்வீகக் கதைகள் பாரு !!!!...
எத்திக்கில் நான் சென்றாலுமே
எட்டாத பரிசு இது !!!!...........
                                                         


டிஸ்கி : கற்பனையிலேனும் இப்படியொரு விருந்துபசாரம்
                 செய்த திருப்தி எனக்கு :) சாப்பாடு எப்படி என்று இனி
                 உங்கள் அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள் ?...............
தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக