செவ்வாய், 6 டிசம்பர், 2011

மரத்துப்போன மனிதர்களுக்கு - கவிதை


மரத்துப்போன மனிதர்களுக்கு - கவிதை

ஓ மரத்துப்போன மனிதர்களே!

உங்கள் பூக்களை
என்னிடம் காண்பிக்க வேண்டாம்
உங்கள் வேர்களை
என்னிடம் காண்பியுங்கள்
நீராவது ஊற்றுகிறேன்
வேர்கள் வாடிப்போகுமே என்பதற்காக அல்ல
விதைகள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காகவே. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக