செவ்வாய், 6 டிசம்பர், 2011

உனக்காக நான் குடுகுடுப்பைக்காரன் ஆகிறேன்.


உனக்காக நான் குடுகுடுப்பைக்காரன் ஆகிறேன்.


தபூ சங்கரின் கவிதைகள்

என்னை
உடைப்பதற்காகவே
என் எதிரில்
சோம்பல் முறிப்பவள் நீ

நீ யாருக்கோ செய்த
மௌன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது!

நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை

காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.


நான்
உன்னைக் காதலிக்கிறேன்
என்பதற்காக
நீயும் என்னைக்
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது

என்னை ஒரு
குடுகுடுப்பைக்காரணாய்
நினைத்துக்கொண்டு
ஓர் அதிகாலையில்
உன் வீட்டுமுன் நின்று
இந்த வீட்டில் ஒரு தேவதை
வாழ்கிறது
என்று கத்திவிட்டு
குடுகுடுவென
நான் ஓடிவந்திருக்கிறேன்.(Me

title

Click to add text, images, and other content

தபூ சங்கரின் கவிதைகள்

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது!
ஏன் இந்தப் பூ
நகர்ந்துகொண்டே
இருக்கிறது? என்று!"

**

வீட்டிற்கு
ஒரு மரம்
வளர்ப்பார்கள்!
உங்கள்
வீட்டில் மட்டும்
ஏன்
ஒரு மயில்
வளர்க்கிறார்கள்?

**


கரையில் நின்றிருந்த
உன்னைப் பார்த்ததும்
கத்தி விட்டன
கடல் அலைகள்...
'கோடான கோடி ஆண்டுகள்

எம்பி எம்பிக் குதித்து
கடைசியில்
பறித்தே விட்டோமா
நிலவை!' என்று.

**

காற்றோடு
விளையாடிக் கொண்டிருந்த உன்
சேலைத் தலைப்பை இழுத்து
நீ இடுப்பில்
செருகிக்கொண்டாய்!
அவ்வளவுதான்...
நின்றுவிட்டது காற்று.

**

நான் சமைத்த பாவக்காயை
நீ விரும்பிச் சாப்பிடும்போது
பாவக்காய்
புண்ணியக்காய் ஆகிவிடுகிறது..

**

என்னுடையது
என்று நினைத்துத்தான்
இதுவரையில்
வளர்த்து வந்தேன்.

ஆனால்
முதல்முறை
உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர்
பின்னால் ஓடும்
நாய்குட்டி மாதிரி
உன் பின்னால் ஓடுகிறதே
இந்த மனசு!

**

வருடத்துக்கு ஒரு முறை
சீதா கல்யாணம்
நடப்பது மாதிரி
உன்னையும் நான்
வருடம் ஒரு முறை
திருமணம் செய்துகொள்ள வேண்டும்.

**

நீ
யாருக்கோ செய்த
மெளன அஞ்சலியைப்
பார்த்ததும்...
எனக்கும்
செத்துவிடத் தோன்றியது.

**

எதற்காக நீ
கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்?
பேசாமல்

வாசலிலேயே
சிறிது நேரம்
உட்கார்ந்திரு
போதும்!

**

முனிவர்கள்
கடவுளைப் பார்ப்பதற்காகத்
தவம் இருக்கிறார்கள்.

நானோ,
ஒரு தேவதையைப்
பார்த்து விட்டுத்
தவமிருக்கிறேன்.

title

Click to add text, images, and other content

எங்கேயும் காதல் கவிதைகள்



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiz9uJL8S5DSDVHys7V9cxP7W9cu_i6CwP-MqCdpBMZQQNGTC2ir2-7wGiTIf0ylGK40oFow0-W2Zv7Zq-EaqeNCsEuggqV_9SkbIXXjeKVH-oqlaGR-VTEsDoEO4Nu5ydfOEO-4GLwRrw/s1600/broken-heart-cards-3.jpg
உனக்கு என்னை பிடித்து இருக்கிறது 
எனக்கு உன்னை பிடித்து இருக்கிறது 
ஏன் அதை என்னிடம் தெரிவிக்க பயப்படுகிறாய் 
ஏன் தொலைவில் நிற்கின்றாய் 
உன்னுடைய மௌனம் சம்மதத்துக்கு 
அறிகுறியா ? உன் பதிலுக்காக தான் 
காத்து இருக்கிறேன் ........


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4F0Tr6FzJlg3-xQTsDWo2BRjZONVdVAoO417uEMslh-SvhB5TLilTgIDCL4GvmPbeeBlmlTssMcE6ljcM2xSWQKjKp2BzaJQF9uK-J8iss-R6D-YjFsmE8uAN-Z_QmjtxCKQXENLxZRIB/s1600/broken-heart-8.jpg
நான் காதலை சொல்ல வந்த 
நேரம் நீ இன்னொரு பெண்ணுடன் 
திருமணத்துக்கு தயாராகி விட்டாய் 
நான் உனக்கு கொடுக்க வந்த பூவும் 
வாடி விட்டது நானும் கூட .......

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD0owrEZTghWPHhTNuPlUBU5HklO3kTIVMh5BnqoUHzAc51-UMyUprBXEqXi7uAEh3qpb2WRG2BZMV_jAQ8KYuvF_YvBHGTklVmryuHjSGlqOoaD3T46n3byRvoKFCbC9Ijux49GXIIKzY/s1600/cry2.jpg
நானும் நீயும் காதலர்களாக 
இருந்தோம் கல்யாணம் 
செய்து கொள்ள ஆசைப்பட்டோம் 
ஆனால் இருவரது வீட்டிலும் 
சம்மதம் இல்லை - பெற்றோரை 
இருவரும் வெறுப்பதா என்ன 
செய்வது என்று எமக்கு தெரியவில்லை 
நான் எனது கவலையை கண்ணீராக 
வடிக்கிறேன் - நீ உனது மனக்குமுறலை 
மனதுக்குள் பூட்டி வைத்து சொல்லவும் 
முடியாமல் , மெல்லவும் முடியாமல் 
தவிக்கிறாய் தவித்துக் கொண்டிருக்கிறாய் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக