செவ்வாய், 6 டிசம்பர், 2011

கவிதை!துளிப்பாக்கள்.


RIDAY, NOVEMBER 18, 2011

கவிதை!துளிப்பாக்கள்...



கனவில்  கலந்து
கற்பனையில் உறவாகி     
கருவுற்றது கவிதை!
=============================
கற்பனைக்கு நிலவோ
பெண்ணாகி கவிதைக்கு
உயிராகியது.
==============================
கற்பனை கனவோடு 
இரவுக்குள் நுழைந்து 
மறுநாள்  மறுபிறவி
=============================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
 
You might also like:

    FRIDAY, NOVEMBER 11, 2011

    மலர்கள் ( துளிப்பாக்கள்)
















    மணம் வீசும் கொழுந்து,
    மயக்கும் பொழுது, மனதை
    கொள்ளைக் கொள்ளும், மரிக்கொழுந்து.


    =======================================

    காதலர்களின் சின்னம்.
    நிறத்திலோ பல வண்ணம்,
    சிகப்பு ரோஜா என்றே சொல்லும்.

    ==================================
    நிலவின் வருகையை கண்டு
    எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
    மலர்ந்த அல்லி.
    =================================

    சூரியனின் கண் பட்டு
    தன்னை மறக்கும் இழக்கும்
    தண்ணீர்த் தாமரை 

    ======================================
    என்யவளின் கூந்தலுக்கு,
    வரையப்பட்ட அழகு ஓவியம்
    மல்லிகை 



    =============================
    மனதில் பதிந்த மணம்
    மெல்லிய இடைச் சொல்லும்
    இது முள்ளில்லா முல்லரும்பு.
    ================================





    உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
     
    You might also like:

      MONDAY, OCTOBER 24, 2011

      கண்கள்...!துளிப்பாக்கள்!


      கண்டவர்களை ஈர்க்க,
      மையோடு பொய்ழுதிய 
      கவிதையிது!
      =============================
      இமை முடி திறந்து,
      மெய்மறக்க செய்யும்,
      போதை இது!
      ===================================
      அரசன் முதல் ஆண்டி வரை 
      அடிமை படுத்திய,
      சூத்திரமிது!
      ===================================
      சூழ்ச்சிக்குள் இரையாக்கும் 
      வேதியல் உருமாற்று
      உலோகமிது .
      ===================================
      கண்ணுக்குள் மையிட்டு 
      இமைக்குள்  இணங்கவைக்கும்
      ஆயுதமிது!
      ===================================
      கன்னியரின் கண்பட்டால் 
      போதும், கால் கடுக்க 
      நிறுக்கும் உலகமிது!
      ==================================
      இவள் இமை முடி சிரித்துவிட்டாள்
      காதல் என்று கொள்ளும் 
      காளையர் பூமிது!

       
      You might also like:

        SUNDAY, OCTOBER 23, 2011

        எய்ட்ஸ்!துளிப்பாக்கள்.



        விடியும் வரை கட்டில் பாடம் 
        விபரிதமறியாமலே விண்ணப்பம்
        எய்ட்ஸ் ஏற்றுக்கொண்டது!
        ================================
        இருந்ததை கொடுத்து
        இரவில் வாங்கியது 
        அழிக்கும் எய்ட்ஸ்!
        =================================
        விடிய விடிய சொல்லியும் 
        விழிப்புணர்வு வரவில்லை 
        எய்ட்ஸ் வரும்வரை!
        =================================
        இவன் விரும்பியதை நடத்த 
        அவள் இருந்ததை தந்தாள்.
        எய்ட்ஸ்!
        ==================================


         
        You might also like:

          விலைமகள் !துளிப்பாக்கள்.


          வாசிக்கத் துடித்தவர்கள்,
          வாசித்தப் பின் தந்த பட்டம்
          வேசி, தாசி !
          ===============================

          நேயர் விருப்பத்திற்கு பின்
          தன் குழந்தைக்கு
          தலாட்டுத் தொடரும்.
          ================================

          விலைப் பேசி,வீழ்ந்தபின்
          விடிந்தவுடன் சொல்கிறான்,
          விலை மகள் என்று.
          ================================

           
          You might also like:

            SATURDAY, OCTOBER 15, 2011

            உதடுகள் எழுதிய கவிதைகள் .




            உதடுகள் எழுதும்
            காற்றுக் கவிதை
            இசையாய் வந்தது.

            ===================
            காற்றுக்கும் காதலாம்
            மூங்கிலில் கவிதைப் பாடியது
            புது இசையாய்!
            ---------------------------------------

            உதடுகள் பேசும்
            காற்றின் வார்த்தைகளை
            இசையாய் மொழிபெயர்த்தது.
            -------------------------------------
            மூங்கில் முகம் கண்டு
            உதடுகள் மீட்ட காற்றும்,
            இசையாய் உரு மாறும்

             

            THURSDAY, JULY 28, 2011

            பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!



            மூட்டைகள் போல 
            திணிக்கப்பட்ட மனிதர்கள்
            அரசு பேருந்து!

            ==================

            பழைய காதலை,
                                                            தூசித்தட்டி சொன்னது,
            கல்லூரி பேருந்து!
            ==================


            அழுது,அடம்பிடிக்க,
            அமுக்கப்பட்ட நிலையில்,
            பள்ளிப் பேருந்து!

            ===================


            சர்க்கஸ் ஆட்டத்துடன்,
            திரைப்பாடல்கள் ஒலிக்க
            புழுதியோடு கிராமத்து பேருந்து!

            =========================




             

            SUNDAY, FEBRUARY 28, 2010

            காற்றில் கலப்படம்.




            நச்சுகளை வெளியிடும்
            தொழிற்சாலைகள்...

            இவர்களுக்கு பெயர்
            தொழிலதிபர்கள்.




             

            FRIDAY, FEBRUARY 26, 2010

            தீப்பெட்டி!


            சின்ன சின்ன
            குச்சிகளில்,
            பிஞ்சுகள் போட்ட
            ஆட்டோகிராப்புகள்

             

            கருத்துகள் இல்லை:

            கருத்துரையிடுக