செவ்வாய், 6 டிசம்பர், 2011

மழைத்தூறல்...ஹைக்கூ கவிதைகள்.



ஹைக்கூ கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

FRIDAY, NOVEMBER 25, 2011

மழைத்தூறல்...ஹைக்கூ கவிதைகள்.



மழைத் தூறலில்
பூக்களில்லாமல் 
மணம்...
================
களைத்தது 
இரவின் மௌனத்தை
தூறல்...
===============
தூறிய தூறல் 
வீட்டுக்கூரைகளில் 
இசைத்தது...
=================
பூமிக்கு 
புனித நீராட்டுவிழா 
மழைத்தூறல்...
================
 
You might also like:

    SATURDAY, NOVEMBER 19, 2011

    கூட்டணி!





    நேற்று கூட்டம் போட்டு
    திட்டித் தீர்த்தவர்கள்
    ஒரே கூட்டணி!
    =======================
    நேற்று எதிரி
    இன்று நண்பன்
    நாளை கேள்விக்குறி.
    ======================
    அடிதடி
    வெட்டு குத்து
    மறைத்தது...
    =====================


    உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
     
    You might also like:

      TUESDAY, NOVEMBER 08, 2011

      உண்ணாவிரதம்.



      செய்த குற்றங்களை 
      மறைக்க போர்வை 
      உண்ணாவிரதம்.
      ===========================
      திசைத் திருப்ப 
      திருத்தப்பட்ட தலைப்பு 
      உண்ணாவிரதம்.
      ========================
      மனசாட்சி புதைக்கப்பட்டு 
      மௌன அஞ்சலி 
      உண்ணாவிரதம்.
      ==========================


      உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
       
      You might also like:

        MONDAY, NOVEMBER 07, 2011

        தவளை.












        இலவச நீர் தொட்டி
        கத்தி மகிழ்ந்தது 
        தவளை.
        ===================
        மழைச்சத்தம் சற்று 
        ஓய்ந்தது போனது 
        தவளைக்காக. 
        ==================
        மழைத் தூறலுடன் 
        காதல்ப்பாட்டு 
        தவளை.


        உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
         
        You might also like:

          தெலுங்கானா...





          அண்ணன் தம்பிகள் 
          பாகப்பிரிவினை 
          தெலுங்கானா
          ==================
          அக்கா தங்கை 
          சக்களத்தி சண்டை 
          தெலுங்கானா
          ====================
          விவாகரத்து கேட்டு 
          தெருக்களில் போராட்டம் 
          ஆந்திரா.
          =======================
          உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்.
           
          You might also like:

            SUNDAY, NOVEMBER 06, 2011

            நாணயம்.


            நாணயம் தடுமாற 
            இடமாறியது 
            வெற்றி.
            ==================
            வாக்குறுதிகள் 
            மறுக்கப்பட மறைந்தது 
            நாணயம்.
            ==================
            நாணமில்லை

            நாணயம் கேட்கும் 
            அதிகாரிகள்!


             
            You might also like:

              SATURDAY, NOVEMBER 05, 2011

              விற்பனைக்கு.ஹைக்கூ கவிதைகள்


              வாக்குறுதி வாக்குகளும் 
              போட்டி போட்டன 
              விற்பனைக்கு.

              =======================
              தேர்தல் களம் 
              மதங்கள் போட்டி 
              தோற்றது  மனிதம்.
              ========================
              ஜனநாயகம் 
              பேரம் பேசப்பட்டது 
              இலவசம்.
              ========================

               
              You might also like:

                தோற்றது ஜனநாயகம்.





                பாபரா ராமரா 
                போட்டியில் தோற்றது
                ஜனநாயகம்.
                =====================
                பாபரா ராமரா 
                தீர்ப்பு  இல்லாத 
                பட்டிமன்றம்.
                ======================
                தேர்தல் சந்தை 
                பாபரும் ராமரும் 
                விற்பனை.

                 
                You might also like:

                  WEDNESDAY, NOVEMBER 02, 2011

                  தீக்குச்சி.


                  கந்தகப் பள்ளியில்
                  பிஞ்சுகள் எழுதிய
                  கவிதைகள்!
                  =================
                  எழுத மறந்த விரல்கள்
                  எண்ணிப்போட்டன 
                  தீப்பெட்டி.
                  =====================
                  ஏழ்மை உரசிப்பார்க்க
                  குழந்தைகள் கையில் 
                  கந்தகம்.


                   
                  You might also like:

                    இயற்கை.


                    கணவன் மனைவி
                    யார் இவன் என ரசித்தனர்.
                    கதிரவன்.
                    ============================
                    இமைகள் இமைக்க மறந்தன
                    இன்றும் இளமையோடு
                    இயற்கை.
                    ============================
                    சொல்லி சிலிர்க்கவைத்தது 
                    அந்தி சிரித்த வாணம் 
                    தம்பதிகளை.

                     
                    You might also like:

                      TUESDAY, NOVEMBER 01, 2011

                      விவசாயி.


                      ஏர் பிடித்த களைப்புக்கு
                      கணினியே இனி
                      ஆகாரம்.
                       
                      You might also like:

                        SUNDAY, OCTOBER 30, 2011

                        இயற்கையும் இளமையும்...


                        இயற்கையும் இளமையும்
                        இரு துருவங்களாய்
                        போட்டி!

                        ===========================
                        இவளைக்  கண்டு 
                        இயற்கை எழுதிய கடிதம் 
                        மழை.
                        ===========================
                        இவளை பார்த்தே 
                        மலையோடு மோதியது 
                        வெண் மேகங்கள்.
                        ===========================
                         
                        You might also like:

                          SATURDAY, OCTOBER 29, 2011

                          பயணம்!



                          மழைக்குள் பயணம்
                          காட்டும் முதுமை
                          விரட்ட...
                          ======================
                          மழையோடு, மனைவி
                          துணையோடு கரைந்தது 
                          முதுமை.
                          ======================
                          காலம் மாறினாலும் 
                          களம் சொல்லும் 
                          காதலை...
                          =======================

                           
                          You might also like:

                            MONDAY, OCTOBER 24, 2011

                            மூடபழக்கம்...!



                            அறிந்தவனும்,அறியாதவனும் 
                            இதில் மட்டும் அடைக்கலம் 
                            மூடபழக்கம்...!

                             
                            You might also like:

                              FRIDAY, OCTOBER 21, 2011

                              வறுமை ...!



                              வறுமையின் விழும்புகள்
                              தழும்புகளாய் மாறின 
                              இவர்களுக்கு.
                              ==============================

                              வரண்ட பூமியை 
                              செழுமையாக்க  துடித்தது 
                              வறுமை!
                              ===========================
                              படிப்பதை மறந்தனர் 
                              வறுமையின் மயக்கத்தில் 
                              பிஞ்சுகள்!
                              ===========================
                              பிழைக்க கற்ற இவர்கள் 
                              படிக்க மறந்தனர் 
                              வறுமையால்!






                               

                              MONDAY, OCTOBER 17, 2011

                              கிரிடிட் கார்ட்.


                              வட்டிக்காரன் எனது தெருவில்,
                              நேற்று வரை வந்துபோனான் 

                              இன்று எனது கையில்.
                               

                              SATURDAY, OCTOBER 15, 2011

                              ஏக்கம்!






                              கம்பத்தில் கொடி
                              சன்னலில் துணி,
                              நிர்வாணமான சிறுவன்.










                               

                              WEDNESDAY, OCTOBER 12, 2011

                              பிரிவு சொல்லும்...


                              ஆசைகளின் அதிர்வுகள்
                              அடைத்துக் கொண்டன
                              பிரிவு !
                              ================


                              ஒரே இரவு, ஒரே நிலவு ,
                              நேற்றும் ,இன்றும் சொல்லும்,
                              நம்மை தவிர!

                              ===================

                              கைக்கு எட்டியது
                              வாய்க்கு கிடைக்கவில்லை,
                              நம் நிலை !

                              ================================
                              வாலிபத்தில் பணத்துக்காக பயணம்,
                              ஒன்றும் மிச்சமில்லை,
                              வயோதிகன்!
                              ===============================
                               

                              MONDAY, FEBRUARY 22, 2010

                              கரு!



                              என் தந்தை எழுதிய
                              கவிதைக்கு நானே
                              கருவானேன்! 


                               

                              கருத்துகள் இல்லை:

                              கருத்துரையிடுக